Star Anand Ram

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம்

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம் அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் ஒரு மனிதனுக்கு என்னென்ன விதங்களில் பிரச்சனைகள் வரும், யாராக இருந்தாலும் எப்பேர்ப்பட்ட மனிதராக இருந்தாலும் பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம், அவனின் மனம். ஒரு மனிதனின் மனம், சரி இல்லை என்றால் அதுவே அவனை சரியில்லாதவனாக மாற்றிவிடும். அந்த மனதில் ஆரம்பிக்கக் கூடிய பிரச்சனைகள் என்ன, எதை வேண்டுமானாலும் சொல்லலாம் பணப் பிரச்சனைகள், கடன் பிரச்சினைகள், உறவு தடைகள், வியாபாரக் கடன், வியாபார …

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம் Read More »

புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது

ஆனந்தம் அறக்கட்டளை சார்பாக நமது ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் எழுதிய புத்தகங்கள் வாரியார் அறக்கட்டளை ஆணைகட்டி கேரளா ஆசிரமத்திற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது

அறிவு செல்வம் பெருகட்டும்

ஜெய் ஆனந்தம் ஆனந்தம் அனைவருக்கும்

திதி நித்ய தேவதைகளின் ரகசியம்

திதி நித்யா தேவியர் யார்?
அவர்கள் பராக்ரமம் என்ன? லலிதா பரமேஸ்வரியை ) ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை “ஸ்ரீவித்யை” எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருட்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர். இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான “பராபட்டாரிகா” என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை

ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியின்

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை

வாஸ்து நாள் சதுர்த்தி சகல வளமும் கிடைக்கும் 28/10/2022

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

அக்சயம் டிவைன் சென்டரின்

ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியின் பக்தியுடன் வழங்கும்

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை
வழிபாடு யாகம் மந்திர ஜெபம் சத்சங்கம் கூட்டு பிராத்தனை

சித்தர்களின் சூச்சம வழிகாட்டுதலில் மிக அற்புதமான ஆதி தமிழர்கனின் ஆன்மிக அறிவியல் பாதையில் ஸ்ரீ ரங்கத்தில் கஜபூஜை கோ பூஜையுடன் தொடங்கி ஏழு கோவில்களுக்கு சென்று
சிறப்பு வழிபாடுகள் செய்ய உள்ளோம்

இந்த நிகழ்வில்

கஜ பூஜை
கோ பூஜை
சுதர்சன யாகம்
நவகிரக ஹோமம்
ஸ்ரீ சூக்த பாராயணம்
சோடசலட்சுமி வசீகர மந்திர பூஜையும் அதை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் 7 கோவில்களிலும் சிறப்பு பரிகார பூஜையும் நடைபெற உள்ளது 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி

ஒருநாள் யாத்திரை

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை
28/11/2022

காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 8 மணிக்கு நிறைவு பெரும்

யாத்திரை வரும் நபர்களுக்கு தோஷ நிவர்த்தி பூஜையும் செய்யப்படும் & செல்வ வசிய யந்திர தாயத்தும் வழங்கப்படும்.

ஸ்ரீ குபேர குருஜியின் சத்சங்கம் மந்திர கூட்டு பிராத்தனையும் நடைபெறும்

எல்லாம் வல்ல பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி

3 நேர உணவு , வாகன செலவு , யாகம் , பூஜை , அபிஷேகம் , அன்னதானம் யந்திரம் தாயத்து & பிரசாதம் அனைத்தும் சேர்த்து

யாத்திரை தொகை – 1950 மட்டுமே

முன் பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி

more details call

+91 7868-868899

www.drstaranandram.com

இலுப்பை எண்ணெய் தீப வழிபாடு

சகல ஐஸ்வர்யங்களும் தரும் இலுப்பை எண்ணெய் தீப வழிபாடு இலுப்பை எண்ணெயில்
சிவப்புத் திரியிட்டு தீபமேற்றும் போது வறுமை, கடன் நீங்கும்.

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

நமது நாட்டில் மருத்துவ குணம் கொண்ட பல அற்புதமான மூலிகைகள், செடிகள், மரங்கள் குறித்து சித்தர்கள் தங்கள் எழுதிய சித்த மருத்துவ குறிப்புகளில் கூறியுள்ளனர். “ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை” என ஒரு தமிழ் பழமொழி உண்டு. இனிப்பு சுவை கொண்ட இலுப்பை மரத்தின் அனைத்துமே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இலுப்பை விதைகளிலிருந்து “இலுப்பை எண்ணெய்” எடுக்கப்படுகிறது. இலுப்பை எண்ணெயால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

இலுப்பை மரம் ஒரு தெய்வீக தன்மை வாய்ந்த மரமாக சித்தர்களால் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. பல மருத்துவ குணங்களை கொண்ட இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் இலுப்பை எண்ணெய் கொண்டு வீடுகளில் தீபம் ஏற்றுவதால் நேர்மறையான சக்திகள் வீட்டிற்குள் ஈர்க்கப்படுகிறது. இதனால் வீடுகளில் இருக்கும் எதிர்மறை சக்திகள் வெளியேறி வீட்டில் மங்களங்கள் பெருகச் செய்கிறது.

ஸ்ரீ குபேர பீடம் ஆனந்தம் அறக்கட்டளை அன்னதான சேவை

அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் ஆசிர்வாதம்

நமது ஸ்ரீ குபேர பீடம் ஆனந்தம் அறக்கட்டளை சார்பாக

அக்சய பிரசாதம் அன்னதான சேவை
செய்ய புதிய வாகனம் ஏற்பாடுசெய்து உள்ளோம்

கோவை இ 1 சிங்கை காவல் நிலைய ஆய்வாளர் வினோத்குமார் அவர்கள் நமது அன்ன
சேவை வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இனி தொடர்து அன்னசேவை இயலாதவர்களுக்கு எங்களால் முடிந்தவரை கொண்டுசேர்ப்போம்

வாய்ப்பை தந்த பிரபஞ்ச சக்திக்கு குருவுக்கு குலதெய்வத்திற்கு

நன்றிகள் கோடி

ஜெய் ஆனந்தம்

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி இன்று

இறைவனை நாம் வழிபட நினைத்தால் இறைவன் நம்மை அழைத்து ஆசி வழங்குவார்

இன்று வழங்கினார் நன்றிகள் கோடி

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது

ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.

மது, கைடபர் என்ற அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். படைக்கும் தொழிலை வேதத்தின் துணை கொண்டு நடத்திவந்தார் பிரம்மா. இந்நிலையில் வேதத்தைத் திருடிக்கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டனர் அசுரர்கள். தேவர்களால் மீட்க இயலாத வேதத்தை மகாவிஷ்ணு, ஹயக்ரீவ குதிரை முகத்துடன் மனித உருவம் தாங்கி, அசுரர்களுடன் போரிட்டு மீட்டார்.
அவரது உக்கிரகத்தைத் தணிக்க, அன்னை லஷ்மி அருகில் வர ஆனந்தமடைந்தார் ஹயக்ரீவர். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், லஷ்மி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். வேதத்தை மீட்ட பெருமாள் ஆனதால் இவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம்.

ஸத்ய நாராயண பூஜை விரத வழிபாடு

ஏன் ஸத்ய நாராயண பூஜை செய்ய வேண்டும்.

மற்ற யுகத்தில் அதாவது முந்தைய ஸத்ய த்ரேதா துவாபர யுகத்தில் கஷ்டப்பட்டு விரதமிருந்து பல ஆண்டுகள் நியம நிஷ்டைகளை கடைபிடித்தால்தான் பரமாத்மா தோன்றுவார்.

ஆனால் கலியுகத்தில் அப்படி அல்ல.

நாம ஸ்மரணை நாம ஜெபம் ஒன்றே பகவானுக்கு பரம ப்ரீதியை தரும்.

அதுமட்டுமல்ல பொய் பித்தலாட்டம் நயவஞ்சகம் அதிகமாக இருக்கும் கலியுகத்தில் இந்த ஸத்ய நாராயண பூஜை ஒன்றே சகல செளபாக்யத்தையும் தர வல்லது.

பகவானை கெட்டியாக பிடித்து கொண்டால் அவரும் நம்மை கெட்டியாக பிடித்துக் கொள்வார்.

ஸத்ய நாராயண பூஜையை ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும்.

இந்த முறை குரு வாரம் அதுவும் திருவோண நட்சத்திரத்தில் வருவது அதி அற்புதமான நாள்.

அதாவது பிரதோஷ வேளையில் ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினார்.

சித்திரை மாதத்தின் முதல் நாளில்தான் பிரம்மதேவன், பூமியைப் படைத்ததாக எல்லா விதமான புராணங்களும் கூறுகின்றன.

ஆமை மோதிரத்தை அணிந்தால் வீட்டை தேடி அதிர்ஷ்டம் வரும்…

இன்றைக்கு ஜோதிட வாஸ்து சாஸ்திரத்தின்படி, பலர் வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது, கையெழுத்தை மாற்றுவது போன்ற பலவற்றை மேற்கொள்கிறார்கள். இதேப்போன்று சமீப காலங்களாக பலர் ஆமை மோதிரத்தை அணிந்துவருவதைப்பார்திருப்பீர்கள். இவ்வாறு அணியும்  போது செல்வ செழிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக புராணங்களின்படி, வராக அவதாரத்தின் அடிப்படையான அமிர்தம் கடைத்தெடுக்கும் போது, பாற்கடலில் வந்தவர் லட்சுமி என்று கூறப்படுகிறது. இதனால் இந்த மோதிரத்தை அணியும்போது மகாலட்சுமியின் ஆசி கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதோடு சுப பலன்கள், வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

“பூமி உருண்டை” என்று சொன்னது யாரு ?

“பூமி உருண்டை” என்று சொன்னது யாரு ?
கலிலீயோதான்.

அப்போ கலிலீயோ பொறக்குறதுக்கு முன்பே இந்த ஸ்ரீவராக பெருமாள் பூமியை சுமக்கும் சிற்பம் இருக்கே; அது எப்படி அவங்களுக்கு பூமி உருண்டை என்று தெரியும் ?

அது தான் மெய் ஞானிகள் நமது சித்தர்களின் ஆன்மிக அறிவியல்

அண்டம் பிண்டம் ஓன்றே

Scroll to Top