குரு பெயர்ச்சி சூச்சம ரகசியங்கள்

குரு பெயர்ச்சி சூச்சம ரகசியங்கள்

குரு பெயர்ச்சி வர போகிறது குருவின் சூச்சமம் தெரிந்து வழிபட்டால் கோடி செல்வம் தேடி வரும்

குருவே சரணம் குருவே துணை

குருவருள் ஸித்திக்கும்!

சூரியனை ஆத்மகாரகன் என்போம். அந்த ஆத்மாவின் ஒளி, ஜீவன் என்றெல்லாம் கூறப்படுவது குருவே!

இவர் லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகிய இடங்களில் நற்பலன்களை அள்ளித் தருகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 1, 4, 7, 10ல் குரு இருக்கும் அமைப்பை கஜகேசரி யோகம் என்பர். இந்த யோகம் உள்ளவர்களுக்கு, மற்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்களால் பாதிப்புகள் இல்லை.

சந்திரனும் குருவும் சேர்ந்திருந்தால், குருச்சந்திர யோகம். இதனால் பேரும் புகழும் தேடி வரும்.

செவ்வாயும் குருவும் இணைந்து நின்றால், குருமங்கள யோகம். இதன் பலனாக நிலபுலன்கள், வண்டி வாகன சேர்க்கை உண்டாகும்.

குரு பலம் வேண்டுமா?

ஜாதகத்தில் குரு பலம் குறைபாடுள்ள அன்பர்கள், வியாழக்கிழமைதோறும் பூஜை அறையை சுத்தம் செய்து, அரிசி மாவு, மஞ்சள் பொடி கலந்து அருகிலுள்ள கோலத்தைப் போட்டு, குருபகவானை கீழ்க்காணும் துதிப்பாடலைச் சொல்லி வழிபட்டு வரம் பெறலாம்.

திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதி முனிவர் அருளிய பாடல் இது.

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

தென்முக தெய்வமும் தேவகுருவும்! குருப்பெயர்ச்சியில் வழிபட வேண்டியது யாரை?

தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியையா, நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருளும் ஸ்ரீ பிரகஸ்பதியையா?

இரண்டு தெய்வங்களையும் வழிபடவேண்டும் என்பதே முறை.

'மெய்ப்பொருள் ஒன்றுதான்; அதைப் பல பெயர்களில் அழைக்கின்றனர் ' சான்றோர் ' என்கிறது வேதம்.

ஆக, இறைவன் என்பவன் ஏகன்; ஒருவனே! ஆன்றோர் பெருமக்களின் வழிகாட்டு தலால், இறைவனை பலவிதத் தோற்றங்களில் வழிபடுகிறோம்.

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தென்திசை பார்த்தபடி அருள்பவர்; குருவுக்கும் குருவானவர்.

தேவர்களின் குரு பிரகஸ்பதி, வடக்குத் திசை பார்த்தபடி காட்சி தருபவர்.

குரு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, பேசாமல் மௌனமாக இருந்தே சனகாதி முனிவர்களுக்குப் பேருண்மையை உபதேசித்து அருளினார் (மௌனம் வ்யாக்யானேன) என்று தெரிவிக்கின்றன புராணங்கள்..

குரு பகவான் பிரகஸ்பதி, மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான வாமனருக்கு ஆசிரியராகத் திகழ்ந்தவர் என்கின்றன புராணங்கள். பிரகஸ்பதியை பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர் எனப் போற்றி வணங்குகிறோம்

ஸ்ரீதட்சிணாமூர்த்தியை, சிவாம்சமாகவே வழிபடுகிறோம் (காலாய நம

. 'மனிதனுக்கு யோகம் ஸித்திக்க வேண்டும் எனில், அதன் முதல் பயிற்சியான மௌனத்தைப் பழக வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் இந்த உலகில், சாதாரணர்களாகிய நாம், எதையுமே பேசித்தான் செயல்படவேண்டியிருக்கிறது. ஆகவே, உலகாயத வாழ்வில், முதலில் பேசும் குருவை வணங்கிப் பிரார்த்தித்துவிட்டு, அடுத்து மௌன குருவை, தட்சிணா மூர்த்தியை வணங்கிப் பேரருளைப் பெறுவோம்.

அறியாமை இருட்டுக்கு அப்பால் எந்தவொரு பொய்த் தோற்றமும் இன்றி, குறையே இல்லாத பரிசுத்தமான, மனதுக்கும் சொல்லுக்கும் எட்டாத அறிவும் ஆனந்த உருவும் கொண்டவர் ஞானம் அளிக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி. இதைத்தான், 'பேசா அநுபூதி பிறந்ததுவே ' என்று போற்றுகிறார் அருணகிரிநாதர். அதாவது, சொல்லாமல் சொல்லி, பேரானந்தத்தை அளிப்பவர் தட்சிணாமூர்த்தி.

ஒருவரது ஜாதகத்தில் குருபகவான் எங்கிருந்தாலும், அதற்காகக் கவலைப்படாமல், கலங்கித் தவிக்காமல், மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் வழிபட்டால், குருவின் பேரருளைப் பெறலாம்.

அதேபோல், வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் ஒருசேர வருகிற நாளில் குருபகவானை வழிபட்டால், இழந்த பதவி மற்றும் செல்வங்களைப் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.

ஶ்ரீ தட்சிணாமூர்த்தி

தென்முகக் கடவுள் தர்மத்தின் வடிவம். இவரை 'அறம் பயந்த செல்வர்’ என்றும் சொல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை. அவை பின்வருமாறு:

  1. திருவெண்காடு - வீராசனர்
  2. திருமாந்துறை - யோக வீராசனர்
  3. கும்பகோணம் - கங்கா கிருபாகரன்
  4. திருவையாறு - குருபரர்
  5. திருவீழிமிழலை - பத்மபாதர்
  6. திருவாரூர் - ஜகத் வீராசனர்
  7. மாங்குடி - குரு உபதேசர்
  8. கஞ்சனூர் - அக்னி தட்சிணாமூர்த்தி
  9. கருவிலி - பவ அவுஷதர்
  10. ஆலங்குடி - மகா தட்சிணாமூர்த்தி
  11. திருவிடைமருதூர் - சாம்பவி தட்சிணாமூர்த்தி
  12. மயிலாடுதுறை - மேதா தட்சிணாமூர்த்தி
  13. மதுரை - சித்த பரமேஸ்வரர்
  14. காசி, திருநெல்வேலி - தாரகேஸ்வரர்
  15. பெருவேளூர், திருவிடைக்கழி - ஸந்த உபதேசிகள்
  16. கொல்லம்புதூர் - அந்தண உபதேசிகர்
  17. திருநாவலூர் - ஊழி முதல்வர்
  18. திருப்புறம்பயம் - அறம் பயந்த பெருமாள்
  19. திருநாவலூர் - ஊழி முதல்வர்
  20. திருப்பெருந்துறை - அருவ தட்சிணாமூர்த்தி
  21. தென் திருவாலங்காடு - வம்ச விருத்தீஸ்வரர்
  22. தக்கோலம் - உத்குடி தாசனார்
  23. ஓமாம்புலியூர் - ஓங்கார ரூபர்
  24. கேதார்நாத் - கவுரி அனுகிரகர்

காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ள எட்டு வகையான தட்சிணாமூர்த்தி வடிவங்கள்

யோக தட்சிணாமூர்த்தி:
சந்திரனைப் போல் வெண்மையாகப் பிரகாசிக்கும் இவர், வீராசனத்தில் அமர்ந்துள்ளார். இடையில் பாம்பு தவழ்கிறது. முழங்காலின்மீது கையை நீட்டியுள்ளார்.முனிவர்களால் சூழப்பட்டுள்ளார். மூன்று கண்களைக் கொண்டவர்.

வீணாதர தட்சிணாமூர்த்தி:
முத்துப்போல் வெண்மையான நிறம் கொண்டவர். பாம்பைப் பூணூலாக அணிந்தவர். அக்னி, அட்ச மாலை ஏந்தியவர். பொன்னாலான வீணையை ஏந்தி மீட்டுபவர். கயிலை மலை மீது விளங்குபவர்.

மேதா தட்சிணாமூர்த்தி:
ஸ்படிகம் போல் தூய வெண்ணிறம் கொண்டவர். ஞானமுத்திரை, புத்தகம், அக்னி, நாகம் ஆகியவற்றைத் தாங்கியவர். அழகிய முகத்துடன் விளங்குபவர். முத்து மாலை அணிந்து கிரீடம் தரித்தவர். ஆல மரத்தடியில் அமர்ந்து சிவாகமப் பொருளை விளக்குபவர்.

ஆசீன தட்சிணாமூர்த்தி:
வெண்மை நிறம் கொண்டவர். மூன்று கண்களுடன் திகழ்பவர். வலது கரங்களில் மழுவும் அம்பும், இடது கரத்தில் மானும் வில்லும் ஏந்தியவர். வியாக்யான பீடத்தில் அமர்ந்துள்ளவர். புலித்தோலை ஆடையாக அணிந்தவர். பாம்பைப் பூணூலாகத் தரித்தவர் (இத்தகைய தட்சிணாமூர்த்தி வடிவம் ஆலங்களில் இல்லை).

வர தட்சிணாமூர்த்தி :
முழங்கால் மீது கால்போட்டு அமர்ந்திருப் பவர். முயலகனை மிதித்துக் கொண்டிருப்பவர். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சனகாதியருக்கு சின்முத்திரை மூலம் வேதாந்தங்களை போதிப்பவர். ஞான முத்திரை, அட்ச மாலை, அக்னி, வேதச் சுவடிகளைத் தாங்கியவர்.

யோக பட்ட அபிராம தட்சிணாமூர்த்தி:
ஒரு முகமும் மூன்று கண்களும், விரிந்த சடையும் கொண்டவர். வீணை வாசித்துக்கொண்டு வியாக்யான பீடத்தில் அமர்ந்திருப்பவர். பாம்பைப் பூணூலாக அணிந்தவர்.

ஞான தட்சிணாமூர்த்தி:
ஒரு முகம், மூன்று கண்கள் கொண்டவர். ஸ்படிகம் போன்று ஒளிர்பவர். நான்கு கைகளில் சூலம், கபாலம், வீணை மற்றும் சின் முத்திரை கொண்டவர். சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை உபதேசிப்பவர்.

சக்தி தட்சிணாமூர்த்தி:
ஸ்படிகம் போன்ற தூய நிறம் கொண்டவர். முத்துக்களால் ஆன அட்ச மாலை, பூரணமான அமுதக்கலசம் கொண்டவர். சின்முத்திரையுடன் பாம்பைக் கைகளில் தரித்தவர். சந்திரனைச் சூடியவர்.

குருவை என்றும் வணங்கவேண்டும்.

ஒட்டு மொத்தமான மகிழ்ச்சிக்கு அது உதவும்.

வேதம் ஓதுபவர்களும் 'ஸ்ரீகுருப்யோ நம:’ என்று குரு வணக்கத்தோடு செயல்படுவார்கள். 'கும் குருப்யோ நம:’ என்று சொன்னால், அது மந்திரமாக மாறிவிடும். அதைச் சொல்லி 16 உபசாரங்களை செயல்படுத்தவேண்டும்.

குருர் பிரம்மா, குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: குரு: ஸாஷாத் பரம்ப்ரம்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம:

என்று செய்யுளைச் சொல்லி வணங்குங்கள். நன்மை நம்மைத் தேடி வரும்.

ஸ்கந்த புராணத்தின் கூற்றுப்படி பிரபாச நதிக்கரையில் சிவனை நோக்கித் தவமிருந்து கிரக அந்தஸ்தை குரு பெற்றதாக கூறுகிறது. அதோடு கூட தேவகுரு எனும் பேற்றினையும் பெற்றார்.

ரிக்வேதம் குருவின் வீடு, தேர், வாகனம், கையில் உள்ள கோல் எல்லாமே தங்கமயமானது எனக் கூறுகிறது.

தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும்

பசுவுக்கு கேரட், முள்ளங்கி, அகத்திக்கீரை தரலாம்.

பழைய கோயில்களை புதுப்பிக்க உதவிகள் செய்வது,

பள்ளிக்கூடங்களுக்கு கரும்பலகை, மேஜை, நாற்காலி வாங்கித் தருவது,

உழவாரப் பணியில் ஈடுபடுவது எனக் காரியங்கள் ஆற்றி பரிகாரம் தேடலாம்

குருப் பெயர்ச்சியின் பாதிப்புகள் அண்டாதவாறு காத்துக்கொள்ள வியாழன்தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு அவசியம்.

மற்ற ராசிக்காரர்கள் வியாழன்தோறும் தங்களுக்கு ஏதுவான குரு ஸ்தலம் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

கோயில் வாசலில் தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை தானமாக வழங்கலாம்

குருவின் நற்பலன்களை அப்படியே பெற அன்னதானம் மிகச் சிறந்தது.

மிக சிறந்தது இனிய வார்த்தை தானம்

மற்றவர்களை ,அவர்கள் மனத்தை புண்படுத்தா வண்ணம் இனிய அன்பான வார்த்தைகள் பேசலாம்

மலர்ந்த புன்னகை ,

இதுவும் முடியாவிட்டால்
மௌனம் காத்தல் ,

மனமும் வாயும் தன் வசம் இல்லாதவர்கள் நிறைய தண்ணீர் குடிக்கலாம் . கோபமும் உடல் எடையும் குறையும்

சுபம்.

நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸
ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி
Dr.Star Anand ram
பணவளக்கலை
Akshyum Divine Center
🕉🕉
www.drstaranandram.com

Back to blog