கிரகமாலிகா யோகம் 2022

கிரகமாலிகா யோகம் 2022

கிரகமாலிகா யோகம் 2022

கிரகமாலிகா யோகம் செல்வ செழிப்பான வாழ்வை ஏற்படுத்தும் சூச்சம வானியல் அற்புதம் சித்தர்கள் வெளிப்படுத்திய ரகசியம்

கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறும் கிரகமாலிகா யோகம் - ஜூலை 2 - 12

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே

18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் பின்னர் 2040ஆம் ஆண்டு தான் இது போன்ற நிகழ்வு ஏற்படும்

கிரகம்’ என்றால் நவகிரகங்களைக் குறிக்கும். ‘மாலிகா’ என்றால் ‘மாலை’ என்று பொருள். கிரங்கள் மாலை தொடுப்பதைப் போல வரிசையாக ராசி வீடுகளில் தொடுக்கப்பட்டிருந்தால் (அமர்ந்திருந்தால்) அது, ‘கிரகமாலிகா யோகம்’ எனப்படும். அப்படி அபூர்வ நிகழ்வு வரும் ஜூலை மாதம் 2 - ம் தேதி சனிக்கிழமை நிகழ இருக்கிறது. இந்த நாளில் ஆறு கிரகங்கள் ஆட்சி பெற்றும் அதன்பின் ஒன்பது நாள்கள் ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்றும் கிரக மாலிகா யோகம் ஏற்பட இருக்கிறது.

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

ஜோதிடத்தில் நம்மில் பெரும்பாலானோர் கவனிப்பது, பலன் அறிந்து கொள்ள நினைப்பது கிரக பெயர்ச்சியின் போது தான். சிலருக்கு அந்த கிரக பெயர்ச்சியின் போது பெரிய கஷ்டங்கள் அனுபவிப்பதாகவும், சிலர் எந்த பிரச்னையும் இன்றி சாதாரணமாகத் தான் இருப்பதாகவும், சிலரோ எதிர்மறையாகக் கஷ்ட காலத்தில் ஓஹோ என உயர்வை சந்திப்பவராக இருக்கின்றனர். இதற்கு காரணம் அவர்களுடைய ஜனன கால ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலையைப் பொருத்து ஏற்படுகின்ற ஜாதக அமைப்பினால் உண்டாகும் யோகங்களே காரணம் எனலாம்.

ஜோதிடத்தில் பல யோகங்கள் கிரகங்க நிலையைப் பொறுத்து ஏற்படுவதாகக் கூறப்படுகின்றன. இவற்றில் ஒரு யோகம் இருந்தாலே, உங்களுக்கு வெற்றிதான் என்கின்றனர் ஜோதிடர்கள்.

இப்படிப்பட்ட யோகங்கள் ஒருவர் தன் வாழ்க்கையில் மோசமான காலத்தில் கூட சிறப்பாக வாழ்வார். ஜோதிடத்தில் 144 வகையான யோகங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றி கிரகமாலிகா யோகம், கேதார யோகம், காமிய யோகம், கார்முக யோகம், கான யோகம்.

ராகு, கேது ஆகிய இரு கிரகங்களைத் தவிர மற்ற ஏழு கிரகங்கள் ஏழு வீடுகளில் தொடர்ச்சியாக நிற்குமானால், அதற்கு ஜோதிடத்தில் கிரகமாலிகா யோகம் என்று பெயர். இந்த யோகத்தைப் பெற்றவர்கள், தங்களின் வாழ்வில் பேரும், புகழும், வசதிகள் நிரம்பியவராகவும், உயர்ந்த பதவி, அந்தஸ்துடன் வாழ்வார்கள்.

ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று பெயர். அதாவது 7 கிரகங்களும் ஒவ்வொரு வீட்டில் வரிசையாக இருக்க வேண்டும்.

வானத்தில் கோள்கள் வரிசை கட்டி நிற்பதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறோம். இந்த அற்புதம் பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ளது. அதிகாலையில் எழுந்து கிழக்கு திசையில் பார்ப்பவர்களுக்கு புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, சந்திரன் என கிரகங்கள் வரிசையாக நிற்பதை பார்த்திருப்போம். கிரகங்கள் இப்படி வரிசையாக நிற்கும் அமைப்பு மிகப்பெரிய யோகமாகும்.

சூரியக்குடும்பத்தில் இருக்கும் 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்து வருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் பின்னர் 2040ஆம் ஆண்டு தான் இது போன்ற நிகழ்வு ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

நவகிரகங்கள்

ஜோதிடவியலில் நவகிரகங்கள் 12 ராசிகளை ஆட்சி செய்கின்றன. அதில் மேஷம், விருச்சிகம் ராசிகளை செவ்வாயும், ரிஷபம், துலாம் ராசிகளை சுக்கிரனும் ஆட்சி செய்கின்றன. மிதுனம், கன்னி ராசிகளை புதனும், கடக ராசியை சந்திரனும் ஆட்சி செய்கின்றன. சிம்ம ராசியை சூரியனும், தனுசு, மீனம் ராசிகளை குருவும், மகரம், கும்பம் ராசிகளை சனியும் ஆட்சி செய்கின்றன.

இந்த மாதம் கிரகங்களின் பயணம் அற்புதமாக அமைந்துள்ளது. கும்ப ராசியில் சனி, மீனம் ராசியில் குரு, மேஷ ராசியில் செவ்வாய், ரிஷப ராசியில் சுக்கிரன், மிதுன ராசியில் புதன், கடக ராசியில் சந்திரன் என வரிசையாக கிரகங்கள் ஆட்சி பெற்று பயணிக்கின்றன.

மனிதர்களாகிய நமக்கு எப்படிச் சொந்த வீட்டில் இருந்தால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகாரமும் ஏற்படுமோ அதேபோன்று கிரகங்கள் அவற்றுக்குரிய சொந்த வீட்டில் அமைவது மகிழ்ச்சியான விஷயம். அவை சொந்த வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று அமர்கின்றன. நவ கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே சொந்த வீடு உண்டு. அவற்றில் ஆறு கிரகங்கள் தம் சொந்த வீட்டில் அமைந்திருக்கும் நிலை வரும் நாள்களில் ஏற்பட இருக்கிறது. வானியல் ரீதியாக கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன என்றும் சொல்லலாம். இதைத்தான் ‘கிரகமாலிகா யோகம்’ என்று சொல்கிறார்கள்.
இதில் ஜூலை 2 -ம் தேதி மட்டும் (காலை 9:45 முதல் மறுநாள் 3.7.22 -ம் தேதி காலை 6.30 மணி வரை) ஆறு கிரகங்கள் வரிசையாகத் தத்தமது சொந்த ஆட்சி வீட்டில் அமையப் போகின்றன.

சனி - கும்பத்திலும், குரு - மீனத்திலும் செவ்வாய் - மேஷத்திலும் சுக்கிரன் - ரிஷபத்திலும் புதன் - மிதுனத்திலும் சந்திரன் - கடகத்திலும் என ஆறு கிரகங்களும் ஆட்சி உச்சம் பெற்று அபூர்வ கிரக மாலிகா யோகமாக அமைந்திருக்கிறது. அதன் பின் அடுத்த பத்து நாள்களுக்கு சந்திரன் தவிர்த்து பிற ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று கிரக மாலிகா யோகத்தில் அமைந்திருக்கின்றன.

இத்தகைய யோகத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்தக் காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில் இந்த யோகம் பிரதிபலிக்கும். அது அந்தக் குழந்தை பிறக்கும் லக்னத்தைப் பொறுத்து யோக ஜாதகமாக மாறும். காரணம் ஒரு ஜாதகத்தில் முக்கியமான ஒரு கிரகமோ அல்லது இரண்டு கிரகமோ உச்சமும் ஆட்சியும் பெற்றிருந்தாலே சிறப்பு என்று சொல்கிற நிலையில் இந்த யோகத்தில் குறைந்த பட்சம் ஐந்து கிரகங்கள் ஆட்சி பலம் பெற்று அமர்ந்திருக்கும். அது இந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட லக்னங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில் பிரதிபலிக்கும். அவர்கள் வாழ்க்கை மிளிரும். இது ஒரு முக்கியமான அமைப்பு என்று சொல்லலாம். இந்த அற்புதமான காலகட்டத்தில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் அமைய இருக்கின்றன.

12 ராசிகளுக்கும் இந்த கிரகமாலிகா யோகம் எப்படி ?
அனைத்து ராசிக்காரர்களுக்கும் இந்த கிரகமாலிகா யோகம் நற்பலன் தருமா என்றால் பொதுவாக ராசிக்கட்டங்களின் அமைப்பைப் பார்த்தால் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளலாம். நவகிரகங்களும் 12 ராசிக்கட்டங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகளைத் தம் ஆட்சி வீடாகக் கொண்டிருக்கின்றன. பொதுவாக மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளை செவ்வாய் பகவானும், ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளை சுக்கிரபகவானும் மிதுனம், கன்னி ஆகிய ராசிகளை புத பகவானும், கடக ராசியை சந்திரபகவானும் சிம்ம ராசியை சூரியபகவானும், தனுசு, மீனம் ராசிகளை குருபகவானும் மகரம், கும்பம் ராசிகளை சனிபகவானும் ஆட்சி செய்கின்றன. இவற்றில் சூரியனைத் தவிர்த்த பிற ஆறு கிரகங்களும் ஆட்சி பலம் பெற்று அமர்கின்றன என்னும்போது பன்னிரெண்டு ராசிக்காரர்களுக்குமே நற்பலன்கள் அதிகரிக்கும். இந்த நாள்களில் சந்திராஷ்டமம் இல்லை என்றால் அந்த ராசிக்காரர் தங்கள் ஜனன கால தசாபுத்திகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் புதிய முயற்சிகளில் துணிந்து இறங்கலாம். அது அற்புதமான பலனைக் கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் பயன் தரும். ஆரோக்கியம் மேன்மையுறும். பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.

புதாதித்ய யோகம் - நற்பலன்கள் பெருக என்ன செய்யலாம்?
சூரியன் மிதுனத்தில் புதனுடன் இணைந்துள்ளார். இதனை ‘புதாதித்யயோகம்’ என்பார்கள். சந்திரனுக்குக் குரு பார்வை. ஆட்சிபலம் பெற்ற செவ்வாயுடன் ராகு இணைந்திருக்கிறார். ஆக, இந்த இரண்டு தினங்களிலும் சில சிறப்பு வழிபாடுகளைச் செய்வதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் நற்பலன்களைப் பெறலாம். குறிப்பாக சூரிய வழிபாடும் புதபகவானுக்குரிய பெருமாள் வழிபாடும் செய்வது சிறப்பு. ஸ்ரீரங்கநாதர், மதுரை மீனாட்சி, துர்கை, முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வது மிகவும் விசேஷமாகும்.

இந்த நாள்களில் வீட்டில் தினமும் காலையில் நீராடி விளக்கேற்றி இஷ்டதெய்வத்தை வழிபட்டு ஒரு நைவேத்தியம் செய்து அதன்பிறகு சாப்பிடுவது உத்தமம். இந்த கிரகமாலிகா யோகம் அமைந்திருக்கும் பன்னிரண்டு நாள்களில் ஏதேனும் ஒரு நாள் ஆலய தரிசனம் செய்வதும் இறைவனுக்கு நடைபெறும் அபிஷேகத்துக்கான திரவியங்கள் வாங்கிக்கொடுப்பதும் நல்ல பலன்களை அதிகப்படுத்தும். குறிப்பாக கன்னி, துலாம், மகரம், கும்பம், மேஷம் ஆகிய ராசியைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் செய்வது புண்ணியபலன்களை அதிகரிக்கச் செய்து நற்பலன்கள் உண்டாகும்

கிரகமாலிகா யோகம் யாகம் யந்திரம்

18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் யோகம்

12 ராசிக்குரிய ராசிவசிய யந்திரம் மந்திர உரு ஏற்றி தன வசிய தாயத்துடன் 51 நபர்களுக்கு ஸ்ரீ குபேர பீடத்தில் யாகம் செய்து தர இருக்கிறோம் விருப்பம் உள்ளவர்கள் உங்கள் பெயர்களை பதிவு செய்யது கொள்ளவும்

ஜூலை 2 - 12 கிரகமாலிகா யோகம்

விபரங்களுக்கு
786 886 8899

ஜெய் ஆனந்தம்

சுபம்.

நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸
ஸ்ரீ குபேர குருஜி
Dr.Star Anand ram
பணவளக்கலை
Akshyum Divine Center
🕉🕉
www.drstaranandram.com

Back to blog