August 2022

இலுப்பை எண்ணெய் தீப வழிபாடு

சகல ஐஸ்வர்யங்களும் தரும் இலுப்பை எண்ணெய் தீப வழிபாடு இலுப்பை எண்ணெயில்
சிவப்புத் திரியிட்டு தீபமேற்றும் போது வறுமை, கடன் நீங்கும்.

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

நமது நாட்டில் மருத்துவ குணம் கொண்ட பல அற்புதமான மூலிகைகள், செடிகள், மரங்கள் குறித்து சித்தர்கள் தங்கள் எழுதிய சித்த மருத்துவ குறிப்புகளில் கூறியுள்ளனர். “ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை” என ஒரு தமிழ் பழமொழி உண்டு. இனிப்பு சுவை கொண்ட இலுப்பை மரத்தின் அனைத்துமே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இலுப்பை விதைகளிலிருந்து “இலுப்பை எண்ணெய்” எடுக்கப்படுகிறது. இலுப்பை எண்ணெயால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

இலுப்பை மரம் ஒரு தெய்வீக தன்மை வாய்ந்த மரமாக சித்தர்களால் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. பல மருத்துவ குணங்களை கொண்ட இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் இலுப்பை எண்ணெய் கொண்டு வீடுகளில் தீபம் ஏற்றுவதால் நேர்மறையான சக்திகள் வீட்டிற்குள் ஈர்க்கப்படுகிறது. இதனால் வீடுகளில் இருக்கும் எதிர்மறை சக்திகள் வெளியேறி வீட்டில் மங்களங்கள் பெருகச் செய்கிறது.

ஸ்ரீ குபேர பீடம் ஆனந்தம் அறக்கட்டளை அன்னதான சேவை

அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் ஆசிர்வாதம்

நமது ஸ்ரீ குபேர பீடம் ஆனந்தம் அறக்கட்டளை சார்பாக

அக்சய பிரசாதம் அன்னதான சேவை
செய்ய புதிய வாகனம் ஏற்பாடுசெய்து உள்ளோம்

கோவை இ 1 சிங்கை காவல் நிலைய ஆய்வாளர் வினோத்குமார் அவர்கள் நமது அன்ன
சேவை வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இனி தொடர்து அன்னசேவை இயலாதவர்களுக்கு எங்களால் முடிந்தவரை கொண்டுசேர்ப்போம்

வாய்ப்பை தந்த பிரபஞ்ச சக்திக்கு குருவுக்கு குலதெய்வத்திற்கு

நன்றிகள் கோடி

ஜெய் ஆனந்தம்

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி இன்று

இறைவனை நாம் வழிபட நினைத்தால் இறைவன் நம்மை அழைத்து ஆசி வழங்குவார்

இன்று வழங்கினார் நன்றிகள் கோடி

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது

ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.

மது, கைடபர் என்ற அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். படைக்கும் தொழிலை வேதத்தின் துணை கொண்டு நடத்திவந்தார் பிரம்மா. இந்நிலையில் வேதத்தைத் திருடிக்கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டனர் அசுரர்கள். தேவர்களால் மீட்க இயலாத வேதத்தை மகாவிஷ்ணு, ஹயக்ரீவ குதிரை முகத்துடன் மனித உருவம் தாங்கி, அசுரர்களுடன் போரிட்டு மீட்டார்.
அவரது உக்கிரகத்தைத் தணிக்க, அன்னை லஷ்மி அருகில் வர ஆனந்தமடைந்தார் ஹயக்ரீவர். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், லஷ்மி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். வேதத்தை மீட்ட பெருமாள் ஆனதால் இவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம்.

ஸத்ய நாராயண பூஜை விரத வழிபாடு

ஏன் ஸத்ய நாராயண பூஜை செய்ய வேண்டும்.

மற்ற யுகத்தில் அதாவது முந்தைய ஸத்ய த்ரேதா துவாபர யுகத்தில் கஷ்டப்பட்டு விரதமிருந்து பல ஆண்டுகள் நியம நிஷ்டைகளை கடைபிடித்தால்தான் பரமாத்மா தோன்றுவார்.

ஆனால் கலியுகத்தில் அப்படி அல்ல.

நாம ஸ்மரணை நாம ஜெபம் ஒன்றே பகவானுக்கு பரம ப்ரீதியை தரும்.

அதுமட்டுமல்ல பொய் பித்தலாட்டம் நயவஞ்சகம் அதிகமாக இருக்கும் கலியுகத்தில் இந்த ஸத்ய நாராயண பூஜை ஒன்றே சகல செளபாக்யத்தையும் தர வல்லது.

பகவானை கெட்டியாக பிடித்து கொண்டால் அவரும் நம்மை கெட்டியாக பிடித்துக் கொள்வார்.

ஸத்ய நாராயண பூஜையை ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும்.

இந்த முறை குரு வாரம் அதுவும் திருவோண நட்சத்திரத்தில் வருவது அதி அற்புதமான நாள்.

அதாவது பிரதோஷ வேளையில் ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினார்.

சித்திரை மாதத்தின் முதல் நாளில்தான் பிரம்மதேவன், பூமியைப் படைத்ததாக எல்லா விதமான புராணங்களும் கூறுகின்றன.

ஆமை மோதிரத்தை அணிந்தால் வீட்டை தேடி அதிர்ஷ்டம் வரும்…

இன்றைக்கு ஜோதிட வாஸ்து சாஸ்திரத்தின்படி, பலர் வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது, கையெழுத்தை மாற்றுவது போன்ற பலவற்றை மேற்கொள்கிறார்கள். இதேப்போன்று சமீப காலங்களாக பலர் ஆமை மோதிரத்தை அணிந்துவருவதைப்பார்திருப்பீர்கள். இவ்வாறு அணியும்  போது செல்வ செழிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக புராணங்களின்படி, வராக அவதாரத்தின் அடிப்படையான அமிர்தம் கடைத்தெடுக்கும் போது, பாற்கடலில் வந்தவர் லட்சுமி என்று கூறப்படுகிறது. இதனால் இந்த மோதிரத்தை அணியும்போது மகாலட்சுமியின் ஆசி கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதோடு சுப பலன்கள், வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

Scroll to Top