July 2022

“பூமி உருண்டை” என்று சொன்னது யாரு ?

“பூமி உருண்டை” என்று சொன்னது யாரு ?
கலிலீயோதான்.

அப்போ கலிலீயோ பொறக்குறதுக்கு முன்பே இந்த ஸ்ரீவராக பெருமாள் பூமியை சுமக்கும் சிற்பம் இருக்கே; அது எப்படி அவங்களுக்கு பூமி உருண்டை என்று தெரியும் ?

அது தான் மெய் ஞானிகள் நமது சித்தர்களின் ஆன்மிக அறிவியல்

அண்டம் பிண்டம் ஓன்றே

ஆடிப்பூரம் 2022

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.அம்மன் பிறந்தநாள்

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.

ஆடி அமாவாசை சிறப்பு தரிசனம் தக்ஷிண கால பைரவர் தரிசனம் தர்மபுரி

அதியமான் கோட்டை காலபைரவர்…

தகடூரை மையமாகக் கொண்டு கோட்டை கொத்தளத்துடன் வாழ்ந்த சிற்றரசர்களின் வரிசையில் ஒருவர்தான் அதியமான்.
கடையெழு வள்ளல்களில் ஒருவராகப் போற்றப்படும் அதியமானுக்கு தனிச் சிறப்பு உண்டு. ஒருமுறை அதியமான் மன்னருக்கு அபூர்வமான நெல்லிக் கனி கிடைத்தது. அந்த நெல்லிக் கனியை உண்டால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது தெரிந்திருந்தும், அந்த நெல்லிக் கனியைத் தான் உண்ணாமல், தமிழின்பால் கொண்டிருந்த தனிப் பற்றின் காரணமாக, தனக்குக் கிடைத்த நெல்லிக் கனியை ஔவை பிராட்டிக்கு தந்து மகிழ்ந்தான்.

ஆடி அமாவாசையின் மகத்துவம்

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் முன்னோர் எந்தத் திதியில் இறந்தார்களோ, அந்தத் திதி மற்றும் அந்த பட்சம், அந்த மாதம் ஆகியவற்றில் சிராத்தம் செய்ய வேண்டும். இறந்த நாளில் செய்ய வேண்டிய சிராத்தத்தை ஒரு சிலர், இறந்த நட்சத்திரத்தில் செய்கிறார்கள். அதைத் தவிர்ப்பது உத்தமம். ஏனென்றால், அன்றைய தினம் திதி மாறி வர வாய்ப்பு உள்ளது. அதனால், இறந்த திதியில் சிராத்தம் செய்வதே சிறப்பு!

திஷ்டியை போக்கும் ஹம்சா கால் கயிறு

திஷ்டியை போக்கும் ஹம்சா கால் கயிறு அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை ஸ்ரீ சக்தி கணபதியே துணை! நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சுப்பகுதி நம்முடைய கணுக்கால் பகுதி ஆகும். நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது. நம்முடைய கணுக்கால் பகுதியில் கயிறு கட்டினாலும்  நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், …

திஷ்டியை போக்கும் ஹம்சா கால் கயிறு Read More »

27 நட்சத்திர காயத்ரி மந்திரங்கள்

27 நட்சத்திர காயத்ரி மந்திரங்கள் :
மந்திரங்கள்

நாம் தெரிந்து கொள்ளப் போவது

27 நக்ஷத்திரங்களின் காயத்ரி :

ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது, மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது கெட்ட நிலைகளில் உள்ள கிரகங்களின் பார்வை குறைந்து தெய்வ பார்வை நம் மீது விழும் பொழுது நமக்கு விளையும் தீமைகளானது குறையும் என்பது பெரியோர்களால் நமக்கு சொல்லப்பட்டது. உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 11 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

10 ஆண்டுகளாக எஜமானுக்காக காத்திருந்த நாய், ஆனால் அவர் கடைசி வரை வரவே இல்லை!

10 ஆண்டுகளாக எஜமானுக்காக காத்திருந்த நாய், ஆனால் அவர் கடைசி வரை வரவே இல்லை!

இந்த ஜப்பானியர் தினமும் ரயிலில் வேலைக்குச் செல்லும் போது இந்த நாயையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வார். 10 மணித்தியாலம் கழித்து அவர் திரும்பும் வரை இந்த நாயும் நாளாந்தம் ஸ்டேஷனில் காத்திருக்கும்!

ஒரு நாள் திடீரென வேலை செய்யும் இடத்தில் இவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். நாய் தனது எஜமான் திரும்பி வருவார், வருவார் என ஸ்டேஷனில் காத்திருந்தது. ஒருநாள் இரண்டு நாள் அல்ல! 10 ஆண்டுகளாக காத்திருந்தது, ஆனால் அவர் கடைசி வரை வரவே இல்லை!

எல்லா நாளுமே நல்ல நாள்தான் கோளாறு பதிகம்

எல்லா நாளுமே நல்ல நாள்தான்

கோளாறு பதிகம்

கோள்களின் தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம்

நாயன்மார்களில் முக்கிய நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் கோள்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்க கோளறு பதிகம் பாடி அருளியுள்ளார்.

கிரக நிலைகளினால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை நீக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் ஒரு பதிகத்தைப் பாடியுள்ளார்.

கோளறு பதிகம்:
ஒரு முறை மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி அழைப்பை ஏற்று மதுரைக்குப் புறப்பட மதுரையை அடுத்த திருவாதவூரிலிருந்து திருஞானசம்பந்தர் கிளம்பினார்.

ஆனால் அந்த நாள் நல்ல நாள் இல்லை, அத்னாஅல் இன்று பயணிக்க வேண்டாம் என திருநாவுக்கரசர் சம்பந்தரின் பயணத்தைத் தடுத்தார்.

இதைக் கேட்ட சம்பந்தர், இறைவனின் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என கூறி பத்து பாடல்களைப் பாடி அருளினார் திருஞான சம்பந்தர்.

பதிகம் எனும் பத்து பாடல்களின் அடக்கத்தைச் சம்பந்தர் அருளினார். அதோடு இந்த பதிக பயனையும் சேர்த்து மொத்தம் 11 பாடல்களை அருளினார்.

பயன்கள்:

கிரக தோஷம், கிரக நிலையால் நாள் சரியில்லை என தோன்றும் போது இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பதே அதன் பொருள்.

இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.
கோளறு பதிகம்
பண் – பியந்தைக்காந்தாரம்

Scroll to Top